பேயுடன் புகைப்படம் | Ghost Stories in Tamil | Ajith Kumar M | My Ghost House

Ghost short Stories in tamil | Pei kadhai | My Ghost House
ஒரு சில மாதங்களுக்கு முன்பு, வளர்ந்து வரும் இயற்கை புகைப்படக் கலைஞரான எனது தோழி தியா, எங்கள் ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் தனியாக ஒரு இரவும் பகலும் கழிக்க முடிவு செய்தார். இரவும் பகலும்  காடுகளில் உள்ள வனவிலங்குகளின் புகைப்படங்கள் மற்றும் காடுகளின் காட்சிகளை அவளால் முடிந்தவரை இயற்கையாகவே தன் போர்ட்ஃபோலியோவிற்குப் பெற விரும்பினாள்.  அவள் தனியாக இருக்க பயப்படவில்லை, ஏனென்றால் அவள் முன்பு பல முறை தனியாக முகாமிட்டு இது போன்ற காடுகளில் இருந்து உள்ளார்.  

ஒரு சிறிய வெட்டவெளியின் நடுவில் கூடாரம் அமைத்து படம் எடுத்துக்கொண்டு இருந்தால், அந்தப் பயணத்தில் அவள் நான்கு ஃபிலிம் ரோல்களை கொண்டு சென்று இருந்தால்,  ஆனால் மூன்று பிலிம் ரோல்களை மட்டுமே நிரப்பி இருந்தால், அந்த ஃபிலிம் கோல்களை கழுவி பார்த்த போது ஏதோ விசித்திரமாக இருந்தது.  ஃபிலிம் ரோல்களில் இருந்த படங்களில் பகலில் எடுத்த புகைப்படங்களை அவள் பார்த்தால் மிகவும் அழகாக இருந்தது ஆனால் இரவில் எடுத்திருந்த புகைப்படம் அதில்  ஒரு அமானுஷ்ய உருவம் மட்டுமே பதிவாகியுள்ளது. அவள் இரவில் பறவைகள் அதன் கூடுகள் பூச்சிகள் என இரவுநேர காட்டை புகைப்படம் எடுத்த நிலையில் அனைத்து இரவு படத்தின் ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒரு கருப்பு நிற உருவம் மிக நீண்ட கூந்தல், முகம் சரியாக தெரியாமல் பயங்கரமான தோற்றம். அதனை தனியாக அவள் வரிசை படுத்தி என்னிடம் காட்டினால் நான் அதனை பார்க்க ஆரம்பித்தேன் கருப்பு உருவம் மெதுவாக ஒரு ஒரு புகைப்படமாக மெதுவாக இடதுபுறம் நகர்கிறது. 

கடைசி பத்து புகைப்படங்களை பயந்து கீழே போட அது தானாக வரிசையில் நகர ஒரு ஒரு புகைப்படமாக கருப்பு முடி வெளியே வர ஆரம்பிக்கிறது. எனக்கும் என் தோழிக்கும் பயத்தில் உடம்பு நடுங்க ஆரம்பிக்கிறது. நான் அப்போது தான் அந்த துணிச்சலான செயலை செய்தேன். கத்தரிக்கோல் ஒன்றை எடுத்து வந்து கருப்பு முடியை கையில் எடுத்து இதற்கு மேலும் முடி மற்றும் நீயும் போட்டோவில் இருந்து வெளியே வர முயற்சி செய்தால் உன் முடிய மொத்தமா நீ வெளியே வரது குள்ளே வெட்டிடுவனு சொல்ல அது டபுக்கென்று முடிய உள்ளே இழுத்தது உடனே அந்த காட்டிற்கு கத்தரிக்கோல் உடன் சென்று புகைப்படத்தை தூக்கி எறிந்து விட்டு வந்து விட்டேன். அந்த செயலை என் தோழி பாராட்டினால். எனக்கு பெருமையாகவும் சந்தேகம் மாகவும் இருந்தது. பேய் நான் கூறியதை கேட்டு கத்தரிக்கோலுக்கு பயந்ததா என்று உடனே பயங்கரமான மணி ஓசை நான் கண் விழித்தால் இவை அனைத்தும் கனவு. கடைசியில் இதில் வருத்தம் என்னவென்றால் அந்த தோழியே என் கனவு தோழிதான் 😅. கதை முடிந்தது. களம்புங்கள் நன்றி. 

Author: 
Ajith Kumar M
Publisher: 
My Ghost House
Platform: 
MSNE Chennai Blog
Copyright: 
இந்த கதை அனைத்தும் சொந்த கற்பனையை சார்ந்தது. இது MSNE Chennai Copyright Claim க்கு உட்பட்டது. MSNE Chennai என்ற Credits ஐ குடுத்து நம் வீடியோ ஆடியோ போஸ்ட் மற்றும் புக்ஸை இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள். 

கருத்துரையிடுக